Complete Guidance for Business Startup

Friday, 13 March 2020

PMEGP 2nd LOAN - பிரதம மந்திரியின் தொழில் விரிவாக்க கடன் திட்டம்


PMEGP மற்றும் MUDRA ஆகிய திட்டங்களில் கடன் பெற்று லாபகரமாக தொழில் நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு 15% மானியத்துடன் கூடிய தொழில் விரிவாக்க கடன் திட்டம். 


பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் கடன் பெற்று லாபகரமாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய தொழில் விரிவாக்க கடன் வழங்கும் திட்டம்.  பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் கடன் பெற்று வெற்றிகரமாக தொழில் நடத்தி கடனை உரிய நேரத்தில் வட்டியுடன் எல்லா தவணைகளையும் சரியாக கட்டியவர்கள் இதில் விண்ணபிக்கலாம். தாங்கள் நடத்தி வரும் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு தேவையான கட்டிடங்கள் கட்டுவதற்கும், நவீன இயந்திரங்கள் வாங்கவும், மூலப் பொருட்களை அதிகரித்து வாங்கவும் இதில் கடன் பெறலாம்.

உற்பத்தித் துறைக்கு 1 கோடி வரை கடன் பெறலாம்
சேவைத் துறைக்கு 25 லட்சம் வரை கடன் பெறலாம்

இந்த திட்டத்தில் 15 சதவிகிதம் மானியம் பெறலாம். அதிகபட்சமாக 15 லட்சம் வரை மானியமாக பெறலாம்.

இந்த திட்டம் கதர் கிராமிய தொழில் வாரியத்தின் கீழ் செயல்படுத்தப் படுகிறது. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் இத்திட்டத்தில் இதுவரை 4,66,471 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் KVIC, KVIB  மற்றும் மாவட்டத் தொழில் மையத்தின் (DIC) மூலம் நிறைவேற்றப்படும்.

இந்தக் கடன் திட்டத்திற்கு தகுதி பெறும் நிறுவனங்கள்:
  • நன்றாக வெற்றிகரமாக இலாபத்துடன் ஓடும் நிறுவனங்கள் தங்களது விரிவாக்கம் மற்றும் மேம்பாடு உற்பத்தி அதிகரிப்பதற்கும் கடன் பெறலாம்.
  • தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பம் மற்றும் தானியங்கு தொழில்நுட்பம் மூலம் தொழில் அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம்
  • உற்பத்தியை அதிகப்படுத்துதல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான தேவைக்கு உதவுதல் ஆகியவற்றிற்கும் கடன் பெறலாம்

நிதி விவரங்கள்:
தொழில்முனைவோர் மூலதனம் – 10% சதவிகிதம்
அரசு மானியம்                 - 15% சதவிகிதம்
மற்றவை வங்கி கடன்          - 75% சதவிகிதம்

உற்பத்தித் துறை (MANUFACTURING UNIT) - ஒரு கோடி ரூபாய் வரை
சேவைத் துறை (SERVICE SECTOR)                -  25 லட்சம் வரை

திட்டத்தின் பெரும் கடன் மதிப்பு
கட்டிடம் கட்டுவதற்கும், எந்திரங்கள் வாங்கவும் இத்திட்டத்தில் கடன் பெறலாம். ஆனால் அதில் கட்டிட கட்டுமானங்கள் திட்ட மதிப்பில் 25% சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது. திட்ட மதிப்பில் மொத்த கேப்பிட்டல் செலவு கட்டிடம் உட்பட திட்ட மதிப்பில் 60% சதவிகிதம் வரை இருக்கலாம்.

மேலும் நடைமுறை மூலதனம் 40% சதவிகிதம் வரை இருக்கலாம். வங்கிகள் தேவைப்பட்டால் இந்தக் கடன் சதவிகிதங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

யாரெல்லாம் இதில் விண்ணப்பிக்க்லாம்??  
  • இதில் விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் பி.எம்.இ.ஜி.பி (PMEGP)  முத்ரா (MUDRA) ஆகிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடன் பெற்றிருக்க வேண்டும். மேலும் வட்டியுடன் தவணை தவறாமல் கடனை கட்டி முடித்திருக்க வேண்டும்.
  • எந்த வங்கியில் முதல் முறையாக கடன் பெற்றுள்ளோமோ அந்த வங்கியிலேயே கடன் பெறலாம், அல்லது வேறு வங்கியிலும் கடன் பெறலாம்.
  • இந்த தொழில் நிறுவனம் நடப்பாண்டுக்கு முந்திய மூன்று வருடங்களில் நல்ல லாபத்தில் இயங்கி இருக்க வேண்டும்.
  • இந்தத் தொழில் உத்யோக் ஆதார் பதிவு பெற்று இருத்தல் அவசியம்
  •   விரிவாக்கக் கடன் பெறும்போது கடனுக்கு தகுந்தாற்போல வேலையாட்களை அதிகப்படுத்துதல் அவசியம்.
  • இந்தத் திட்டம் பி.எம்.இ.ஜி.பி (PMEGP)   திட்டம் போலவே மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்த படுகிறது.

எந்தெந்த வங்கிகளில் கடன் பெறலாம்:
  • எல்லா பொதுத்துறை வங்கிகள் (All Public Sector Banks)
  • எல்லாக் கிராமப்புற வங்கிகள் (All Regional Rural Banks)
  • டாஸ்க் போர்ஸ் கமிட்டி ஒப்புதல் பெற்ற கூட்டுறவு வங்கிகள் தனியார் வங்கிகள் இக்கடனைப் பெறலாம். (Cooperative Banks)
  •  சிட்பி (SIDBI – Small Industries Development Bank of India)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை பி.எம்..ஜி.பி இணையதளம் (PMEGP Portal) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்க வேண்டும்:
  •   PMEGP/MUDRA முந்தைய கடன் விபரங்கள், கடன் கட்டி முடித்ததற்கான வங்கியின் சான்று.  
  • விரிவாக்கத்திற்கான தொழில் திட்ட அறிக்கை
  •  விண்ணப்பதாரரின் போட்டோ
  • 3 ஆண்டுகள் வருமான வரி செலுத்திய படிவம். (IT RETURNS)
  • மூன்று வருட சார்ட்டட் அக்கவுன்டன்ட் கணக்குப் பரிந்துரை இவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். (Auditor Balance Sheet)

மாநில டாஸ்க் போர்ஸ் கமிட்டி விண்ணப்பங்களைப் ஆராய்ந்து அனைத்தும் சரியாக உள்ள பட்சத்தில் இத்திட்டத்தை ஒப்புதல் அளித்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புவார்கள்.

இத்திட்டத்தில் வங்கிகள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் முதல் தவணையை கொடுக்க வேண்டும். அதன்பின் மானியத் தொகையை வங்கிகள் பெற்று  18 மாதம் வங்கியில் டெபாசிட்டாக வைக்கப்படும் அதற்கு வட்டி கிடையாது. 

இதில் கடன் பெற சொத்து பிணையம் தேவையா?
இந்த கடன் சி.ஜி.டி.எம்.எஸ்.சி (CGTMSE) என்ற இத்திட்டத்தின் மூலம் எந்தவித சொத்துப் பிணையம் இல்லாமலே வங்கிகள் கடன் கொடுக்கலாம். எனவே சொத்துப் பிணையம் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் வரை மானியத்துடன் கடன் பெறலாம்.

இக்கடனை வங்கிகளும், மானியம் வழங்கும் ஏஜென்சிகளும் சேர்ந்து மேற்பார்வை இடுவார்கள் அதுமட்டுமின்றி மூன்றாம் தர ஒருவரை நியமித்து மேற்பார்வையிட செய்வார்கள்.

திட்ட அறிக்கை என்றால் என்ன?
திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு, பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement, பின் பண செலவு செய்யும் முறை Cash Flow, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.

மேற்கண்ட கடன் திட்டம் பற்றிய ஆலோசனைகள், வங்கிகளுக்கான திட்ட அறிக்கைகள்  தயாரித்தல் மற்றும் ஆன்லைனில் விண்ணபிக்க எங்களை அணுகலாம்.

தொடர்புக்கு:
Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross, Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886

Saturday, 7 March 2020

TIIC - தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திட்டங்கள்

TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION (TIIC)

தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது.  


புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது.

குறிப்பாக நிலம், இயந்திரம், கட்டிடம் போன்ற அடிப்படை முதலீடுகளுக்கு கடன் வழங்குகிறது. தொழிலை விரிவாக்கம் செய்யவும், நவீனப்படுத்தவும் இந்த நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கலாம். உற்பத்தித் தொழில்கள் தவிர, ஓட்டல்கள் மருத்துவமனை, சுற்றுலா உள்ளிட்ட சேவை துறைச் சார்ந்த தொழில்கள் தொடங்கவும் கடனுதவி வாங்கலாம்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் முதலீட்டுக் கடன் கிடைக்கும். முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு 40 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குகிறது இந்த நிறுவனம். தமிழக அளவில் 6 மண்டல அலுவலகங்கள், 25 கிளை அலுவலகங்கள் 5 கள அலுவலகங்களைக் கொண்டு தொழில் முனைவோர்களுக்கு சேவை செய்து வருகிறது.

தொழில் முனைவோர் ஆரம்ப முதலீடுகள் கிடைக்காமல் தொழிலை மேற்கொள்ள தயங்கும்போது, திட்டத்தின் அடிப்படையில் அவர்களை ஊக்குவிக்கிறது. தொழிற்கடனுக்காக வங்கிகளை நாடுவதைவிட, தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெறுவது எளிதானது. மேலும் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகள் நேரடியாக தொழில் முனைவோரைச் சென்று சேர தொழில் முதலீட்டுக் கழகமும் உதவி செய்கிறது. கடன் வழங்குவது தவிர உறுப்பினர்களுக்கான தொழிற் காப்பீடு செய்யவும் உதவி செய்து வருகிறது.

எதற்கெல்லாம் கடன் வாங்க விண்ணப்பிக்கலாம்?
நீண்ட கால அடிப்படையில் காலமுறைக் கடன்களை வழங்கி வருகிறது. புதிய தொழில் தொடங்க, ஏற்கெனவே மேற்கொண்டு வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும், தொழிலை நவீனப்படுத்தவும் இதன் மூலம் கடன் வாங்கலாம். கட்டிடம் தொழில் இயந்திரங்கள், மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த கடன்கள் வழங்கப்படுகிறது.

தவிர தொழில் முனைவோர்கள் மாநில அரசு நிறுவனங்களிடமிருந்து பெறும் தொழில் ஆணைகளுக்கு ஏற்பவும் கடன் கிடைக்கும். அரவை மில்கள், ஆலைகள், அலோபதி, ஆயூர்வேத மற்றும் பல் மருத்துவமனைகள் அமைப்பதற்கான கடன், குளிர்பதன கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், வணிக வளாகம், சமூக கூடங்கள், திருமண மண்டபங்கள் அமைத்துக் கொள்வதற்கான கடனுதவிகளையும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் செய்து வருகிறது.

குறு மற்றும் சிறு தொழில்களுக்கான காலக் கடன் மற்றும் நடைமுறை மூலதனக் கடன் திட்டம்:

கடன் பெற தகுதியான தொழில்கள்:

இக்கழகத்தில் நிதியுதவி பெறத் தகுதியான தொழில் நிறுவனங்கள் கீழ்காணும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது ஈடுபட வேண்டும்.

1.   பொருட்கள் உற்பத்தி செய்தல்
2.   பக்குவப்படுத்தல்
3.   சுரங்கத் தொழில்
4.   மின்சாரம் அல்லது வேறு திறன் உற்பத்தி செய்தல்
5.   மருத்துவ இல்லம் அமைத்தல்
6.   பராமரிப்புத் தொழில்
7.   பழுது பார்த்தல், சோதனை செய்தல்
8.   மரக்கலங்கள், மோட்டார் படகுகள், டிராக்டர்கள் பழுது பார்த்தல்
9.   தங்கும் விடுதிகள்
10. வாகனங்கள் வாங்குதல்
11. மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடிப்பு சாதனங்கள் தயாரித்தல்

  
கடன் தொகையின் அளவு:
குறு மற்றும் சிறு தொழில்களின் மொத்த தேவை 200 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மொத்த திட்ட மதிப்பு கால கடன் மற்றும் நடைமுறை மூலதன கடன் (பயனாளியின் பங்கு நீங்கலாக).

பயனாளியின் பங்குத் தொகை:
பயனாளியின் பங்காக 25-35% தொழில் முதலீடாக கொண்டு வர வேண்டும். NEEDS திட்டமாக இருந்தால் 05% தொழில் முதலீடாக கொண்டு வர வேண்டும்.

கடன் பெற தேவையான சொத்து பிணையம்:
நடைமுறை மூலதன கடன் – 100%
காலக் கடன் – 50%

கடனை திரும்ப செலுத்தும் காலம்:
கலக் கடன் – 5 முதல் 7 ஆண்டுகள் வரை
நடைமுறை மூலதனக் கடன் – 3 முதல் 4 ஆண்டுகள் வரை

புதிய மற்றும் நடைமுறையில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் திட்டம்:

திட்ட மதிப்பு:
குறு மற்றும் சிறு தொழில்களின் மொத்த தேவை 50 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மொத்த திட்ட மதிப்பு கால கடன் மற்றும் நடைமுறை மூலதன கடன் (பயனாளியின் பங்கு நீங்கலாக).

கடன் தொகையின் அளவு:
புதிய தொழில்களாக இருந்த திட்ட மதிப்பில் 80% அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை பெற முடியும்.

நடைமுறை தொழிலாக இருந்தால் திட்ட மதிப்பில் 75% அதிகபட்சமாக ரூ.37.50 லட்சம் வரை பெற முடியும்.

பயனாளியின் பங்குத் தொகை:
பயனாளியின் பங்காக குறைந்த பட்சம் 20% தொழில் முதலீடாக கொண்டு வர வேண்டும்.

கடன் பெற தேவையான சொத்து பிணையம்:
அரசினால் நிர்ணயம் செய்யப்படும்.

கடனை திரும்ப செலுத்தும் காலம்:
அதிக பட்சம் 06 ஆண்டுகள் வரை.

நடைமுறை மூலதனக் கடன் திட்டம் (உற்பத்தி தொழில்கள் அரிசி ஆலைகள் உட்பட):

கடன் பெற தேவையான தகுதிகள்:
தொழில்நிறுவனம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நல்ல லாபமான முறையில் செயல்பட்டிருக்க வேண்டும்.

திட்ட மதிப்பு:
குறு மற்றும் சிறு தொழில்களின் மொத்த தேவை 150 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். அதற்கும் மேல் தேவைப்பட்டால் ஒரு வருடத்திற்கு பிறகு பரிசீலனை செய்யபடும்.

கடன் தொகையின் அளவு:
புதிய தொழில்களாக இருந்த திட்ட மதிப்பில் 80% அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை பெற முடியும்.
நடைமுறை தொழிலாக இருந்தால் திட்ட மதிப்பில் 75% அதிகபட்சமாக ரூ.37.50 லட்சம் வரை பெற முடியும்.

பயனாளியின் பங்குத் தொகை:
பயனாளியின் பங்காக குறைந்த பட்சம் 25% தொழில் முதலீடாக கொண்டு வர வேண்டும்.

கடன் பெற தேவையான சொத்து பிணையம்:
TIIC கிளைகள் – 125% சொத்து மதிப்பு இருக்க வேண்டும்.
இதர வங்கிகள் – 150% சொத்து மதிப்பு இருக்க வேண்டும்.



கடனை திரும்ப செலுத்தும் காலம்:
அதிக பட்சம் 06 ஆண்டுகள் வரை.

பில் பைனான்சிங் கடன் திட்டம் :
உற்பத்தி சாரா குறு, சிறு தொழில் நிறுவனங்கள் TNEB / TWAD / TANSI / TNPL போன்ற முக்கிய நிறுவனங்களில் பெரும் கான்ட்ராக்ட் ஆர்டர்களின் மீது பெறப்படும் பில்களுக்கு உடனடியாக கடன் பெற முடியும்.

கடன் தொகையின் அளவு:
TNEB / TWAD / TANSI / TNPL போன்ற முக்கிய நிறுவனங்களில் பெரும் கான்ட்ராக்ட் ஆர்டர்களின் மீது பெறப்படும் பில்களுக்கு 50% வரை உடனடியாக கடன் பெற முடியும்.

இதர கட்டணங்களின் விபரம்:
ப்ராசசிங் கட்டணம்: கடன் தொகையின் அளவை பொறுத்து மாறுபடும் குறைந்த பட்சம் 1%. இத்தொகையினை திரும்ப பெற இயலாது.

புதுப்பித்தல் கட்டணம்: கடன் தொகையின் அளவில் 0.50% .

அபராத வட்டி: கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாத பட்சத்தில் அபராத வட்டியாக 2.5% வசூலிக்கப்படும்.

கடனை திருப்பி செலுத்தும் காலம்:
வாங்கும் கடனை 120 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

சேமிப்பு கிடங்கு தொடங்க கடன் திட்டம் :
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களினால் உற்பத்தி செய்யபடும் பொருட்களை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு தேவையான கடன் வழங்கும் திட்டம்.
  
தகுதிகள்:

தொழிற்பேட்டைகள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகில் நல்ல தொழில் வாய்புள்ள இடத்தில் சேமிப்பு கிடங்குகள் அமைக்க இதில் கடன் பெறலாம். இதற்கு தேவையான உபகரணங்களான ஓவர்ஹெட் கிரேன்ஸ், போர்க் லிப்ட், வெய்டிங் மெசின்ஸ் மற்றும் குளிர்பதன கிடங்கு அமைக்கவும் கடன் பெறலாம்.

கடன் அளவு: தேவைகேற்ப கடன் வழங்கபடும்.

பயனாளியின் முதலீடு: திட்ட மதிப்பீட்டில் 35% சொந்த முதலீடாக கொண்டு வர வேண்டும்.

கடனை திருப்பி செலுத்தும் காலம்:
வாங்கும் கடனை 9 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்(2 வருடங்கள் கடன் செலுத்த விடுப்பு காலம் உட்பட).

ஜெனரேட்டர் வாங்க கடன் வழங்கும் திட்டம்:
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் மின்வெட்டினால் ஏற்படும் இழப்பிடுகளை தவிர்க்க சொந்தமாக ஜெனரேட்டர் வாங்க கடன் வழங்கபடுகிறது.

தகுதிகள்:
அனைத்து குறு, சிறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

கடன் அளவு: தேவைகேற்ப கடன் வழங்கபடும்.
பயனாளியின் முதலீடு: திட்ட மதிப்பீட்டில் 35% சொந்த முதலீடாக கொண்டு வர வேண்டும்.

கடனை திருப்பி செலுத்தும் காலம்:
வாங்கும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்(6 மாதங்கள் விடுமுறை காலம் உட்பட).


கடன் பெற தேவையான சொத்து பிணையம்:
மொத்த மதிப்பில் 50% சொத்து மதிப்பு இருக்க வேண்டும்.

வணிக மையம் மற்றும் திருமண மண்டபங்கள் கட்ட கடன் வழங்கும் திட்டம்:
இத்திட்டத்தில் நிலம் தவிர வணிக மையம் மற்றும் திருமண மண்டபங்களின் கட்டிடம் கட்டுவதற்கும் மற்றும் உபகரணங்கள் வாங்குதற்கும் கடன் பெற முடியும்.

தகுதிகள்:
அனைத்து குறு, சிறு தொழில் சார்ந்த உரிமையாளர் / பங்குதாரர் மற்றும் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

கடன் அளவு:
Ø  உரிமையாளர் / பங்குதாரர் தொழில்நிறுவனம் – 500 லட்சம் அதிகபட்சமாக கடன் பெற முடியும்.

Ø  பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் – 1,000 லட்சம் அதிகபட்சமாக கடன் பெற முடியும்.

பயனாளியின் முதலீடு: திட்ட மதிப்பீட்டில் 35% சொந்த முதலீடாக கொண்டு வர வேண்டும்.

கடனை திருப்பி செலுத்தும் காலம்:
வாங்கும் கடனை 8 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்(2 ஆண்டுகள் ஆரம்ப விடுப்பு காலம் உட்பட).

கடன் பெற தேவையான சொத்து பிணையம்:
மொத்த மதிப்பில் 50% முதல் 100% வரை திட்டத்தினை பொருத்து சொத்து மதிப்பு இருக்க வேண்டும்.

 நமது மருத்துவர் கடன் திட்டம்:
இத்திட்டத்தில் மருத்துவதுறை சார்ந்த சித்தா, ஹோமியோபதி, அலோபதி, ஆயுர்வேதிக் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த மருத்துவ மனைகள், நர்சிங் ஹோம்ஸ் மற்றும் கிளினிக் நிறுவ கடன் பெறலாம். மேலும் ஆம்புலன்ஸ் வாங்கவும் இதில் கடன் பெற முடியும்.

தகுதிகள்:
  • Ø  இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மருத்துவ துறை சார்ந்த MBBS / BAMS / BDS / BHMS போன்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி பயின்று போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Ø  குறைந்த பட்சம் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • Ø  விண்ணப்பதாரர் வயது 20 – 60 க்குள் இருக்க வேண்டும்.
  • Ø  மறு விற்பனை செய்த இயந்திரங்கள் வாங்க கடன் கிடையாது.


கடன் அளவு:
  • Ø  உரிமையாளர் / பங்குதாரர் தொழில்நிறுவனம் –குறைந்த பட்சம் 10 லட்சம் முதல் 150 லட்சம் அதிகபட்சமாக கடன் பெற முடியும்.
  • Ø  கிராமம் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் 40 லட்சம் வரை கடன் பெற முடியும். ஏனைய பகுதிகளில் 150 லட்சம் அதிகபட்சமாக கடன் பெற முடியும்.


பயனாளியின் முதலீடு:
  • திட்டத்தின் உபகரணங்கள் மதிப்பீட்டில் 15%
  • திட்டத்தின் கட்டிடங்கள் மதிப்பீட்டில் 25%
  • திட்டத்தின் நிலம் மற்றும் கட்டிடம் மதிப்பீட்டில் 35% கொண்டு வர வேண்டும்.


 கடனை திருப்பி செலுத்தும் காலம்:
வாங்கும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் ( விடுமுறை காலம் உட்பட).

கடன் பெற தேவையான சொத்து பிணையம்:
அரசு பணியில் இருப்போர் அல்லது பிற மருத்துவரின் உத்திரவாதம் அளிக்க வேண்டும். பின்னர் அரசு நிர்ணயிக்கும் சொத்து பிணையம் சமர்பிக்க பட வேண்டும்.

புதிய தொழில்முனைவோர், தொழில்நிறுவன மேம்பாட்டு திட்டம்:
தமிழக முதல்வரின் கனவு திட்டமான NEEDS திட்டத்தில் ஒரு கோடி வரை மானியத்துடன் கடன் பெற இங்கே விண்ணப்பிக்கலாம்.

மேலும் இத்திட்டம் பற்றிய விபரங்கள், தொழில் திட்ட அறிக்கைகள் மற்றும் கடன் பெற வழிவகைகள் அனைத்திற்கும் எங்களை அணுகலாம்..

Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross, Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886