Complete Guidance for Business Startup

Thursday, 5 March 2020

பாண்டிச்சேரி அரசின் தொழில் கடன் திட்டங்கள் (PUDUCHERRY SCHEMES)


பாண்டிச்சேரி மாநிலத்தில் புதிதாக தொழில் துவங்க 45% மானியம், அதிகபட்சமாக ரூபாய் 75 லட்சம் வரை மானியம் பெறலாம்.

பாண்டிச்சேரி அரசு தொழில் அபிவிருத்திக்காகவும், வேலைவாய்ப்பினை உருவாக்கவும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் தொழில் துவங்குபவர்களுக்கு 40% வரை மானியம் வழங்க வழிவகை செய்துள்ளது. அது மட்டுமின்றி 16 வகையான சலுகைகள் மற்றும் மானியங்கள் கொடுத்துள்ளது. அவைகளை என்ன என்பதை பார்க்கலாம்.


தொழில் மூலதன மானியம்:
  • இது புதிய மற்றும் விரிவாக்கம் செய்யும் குறு மற்றும் சிறு தொழில்களுக்கு பொருந்தும்.
  • குறு மற்றும் சிறு தொழில் மூலதன மானியம் 40%. இது நிலம், கட்டிடம் மற்றும் எந்திரங்களின் முதலீட்டில் செலவிடும் தொகையில் ரூபாய் 40 லட்சம் வரை மானியம் பெறலாம்.
  • மத்திய மற்றும் பெருந்தொழில்களுக்கு 35% மானியம் அதிகபட்சம் ரூபாய் 35லட்சம் வரை பெறலாம்.
  • பெண்கள் மற்றும் எஸ்.சி/ எஸ்.டி தொழில் முனைவோருக்கு 45% மானியமாகவும் அதிக பட்சம் 75 லட்சம் வரை மானியம் பெறலாம்.


வாட் வரி மானியம்:
(இது ஜி.எஸ்.டி-யாக மாறியுள்ளதால் அதற்கான மாற்று ஆணை பிறப்பித்த பிறகே இது நடைமுறைக்கு வரும். பழைய ஆணையை பார்போம்)
  • குறு மற்றும் சிறு தொழில்கள் 100% வரை கட்டும் வாட் வரியை 5 வருடத்திற்கு திரும்ப பெறலாம். இதையே மகா மற்றும் யாமன் இடங்களில் 7 வருடம் வரை மானியமாக திரும்ப பெறலாம்.
  • மத்திய தொழில்களுக்கு 75% வரை வாட் மானியம் 5 வருடங்களுக்கும் மகா மற்றும் யாமன் இடங்களுக்கு 7 வருடம் வரை மானியமாக திரும்ப பெறலாம்.
  • பெருந்தொழில்கள் கட்டும் வாட் வரியை 50% மானியமாக பெறலாம். மகா மற்றும் யாமன் இடங்களுக்கு 7 வருடம் வரை மானியமாக திரும்ப பெறலாம்.


வட்டி மானியம்:
வங்கிகளில் காலகடன் நடைமுறை மூலதன கடன் பெறும் தொழிற்சாலைகள் தாங்கள் கட்டும் வட்டியில் இருந்து 25% மானியமாக பெறலாம். இது 5 ஆண்டுகளுக்கு பெறலாம். வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை பெறலாம். மகா மற்றும் யாமன் இடங்களுக்கு 7 வருடம் வரை பெறலாம்.

முத்திரை தாள் வரி தள்ளுபடி:
நிலம் வாங்க, நிலம் ஈடு கொடுக்க, அடமானம் வைக்க நிலம், கட்டிடம் முதலியவற்றிற்கான முத்திரை தாள் கட்டணம் 100% வரை மானியமாக பெறலாம்.

அடிப்படை உள்கட்டமைப்பு அமைக்க மானியம்:
அடிப்படை உள்கட்டமைப்பு ஐ.டி நிறுவனங்களுக்கு அமைக்க 30% வரை மானியம் ரூபாய் 1 கோடிக்கு மேல் பெறலாம். குறைந்த அளவு 50,000 சதுர அடி முதல் இருக்க வேண்டும். இது ஐ.டி தொழிலுக்கான இடமாக இருக்க வேண்டும்.

மின்சார மானியம்:
தொழில்கள் உபயோகிக்கும் மின்சாரம் 5 வருடங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 50 பைசா மானியமாக திரும்ப பெறலாம். மகா மற்றும் யாமன் இடங்களுக்கு 7 வருடம் வரை பெறலாம்.

ஜெனரேட்டர் மானியம்:
தொழில்கள்  வாங்கும் ஜெனரேட்டர்களுக்கு  50% வரை ஜெனரேட்டர் மானியம் அதிகபட்சம் 5 லட்சம் வரை மானியமாக பெறலாம்.

 தொழிலாளர் சம்பள மானியம்:
தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் 20% வரை மானியமாக திரும்ப பெறலாம். தொழிலாளர்கள் பி.எப் நிதி பெரும் திட்டத்தில் இணைந்து இருத்தல் அவசிசம்.  ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 5 லட்சம் வரை மானியமாக பெறலாம். இவை அனைத்தும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 60% பேருக்கு மேல் இருத்தல் அவசியம்.

மாசுக் கட்டுபாட்டு உபகரணங்களுக்கு மானியம்:
அணைத்து தொழில்களும் மாசுக் கட்டுபாட்டு உபகரணங்களுகள் உபயோகித்ததால் உபகரணங்களுக்காண செலவில்  25% வரை மானியம் வழங்கப்படும்.

திறன் பயிற்சி மானியம்:
அணைத்து தொழில்களும் தொழிலாளர்களுக்கு இரண்டு வாரம் திறன் பயிற்சி அளிக்க ரூ.3000/- வரை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மானியம் பெறலாம். இதற்கு புதுச்சேரி மேனேஜ்மென்ட் புரடக்டிவிடி கவுன்சிலில் அளிக்க வேண்டும்.

தர நிர்ணய சான்றிதல் மானியம்:
தர நிர்ணய சான்றிதல்கள் மிக அவசியம் அணைத்து தொழில்களும் 3 சான்றிதல்கள் வரை பெற செலவில் 50% வரை மானியம் பெறலாம். ரூ.2 லட்சம் வரை மானியம்.

அறிவு சார் சொத்துரிமை காப்பீடு  (ஐ.பி.ஆர்) மானியம்:
அறிவு சார் சொத்துரிமை ஐ.பி.ஆர் பெற அணைத்து தொழில்களும் காப்பீடு பெறும் செலவில் 50% வரை மானியம். உள்நாட்டு காப்பீடு பெற ரூபாய் 2 லட்சம் வரையும், வெளிநாட்டு காப்பீடு பெற ரூபாய் 5 லட்சம் வரை மானியம் பெறலாம்.

சந்தை படுத்துதல் உதவி மானியம்:
இண்டர் நேசனல் டிரேட் கண்காட்சிகளில் கலந்து கொள்ளும் தொழில் சங்கங்களுடன் இணைந்த தொழில் அதிபர்கள் 50% வரை செலவில் மானியமாக ரூபாய் 5 லட்சம் வரை பெறலாம்.

மின்சாரம் மற்றும் தண்ணீர் சேமிப்புக்கான மானியம்:
மின் மற்றும் தண்ணீர் சேமிப்புக்காக செய்யப்படும் கட்டமைப்புகளுக்கு 50% வரை மானியம் பெறலாம். ரூ.25,000/- வரை பெறலாம்.

மாநில பரிசு:
ஓவ்ஒரு அண்டும் சிறந்த தொழில் அதிபருக்கு மாநில சிறந்ததொழிலுக்கான பரிசு  ரூபாய் 2 லட்சம் பரிசாக அளிக்கப்படும்.

நலிவடைந்த தொழில்களுக்கு புனரமைப்பு திட்டம்.
ஒரு முனையில் தொழில் முனைவோருக்கு அனைத்து சான்றுகளையும் பெற்று தரும் முறையும் உள்ளது.

மேலும் விபரங்களுக்கு.
மாவட்ட தொழில் மையம்
தொழில் பேட்டை, தட்டன் சாவடி, புதுசேரி-605009
போன்: 0431- 2248391

மேலும் விபரங்களுக்கும் வங்கிகளில் கடன் பெற தேவையான தொழில் திட்ட அறிக்கைகள் பெறவும் அணுகலாம்.  

Sastha Startup Solutions
No.9, Second Floor, Surya Complex
9th Cross, Thillainagar, Trichy-18
Mobile: +91 9789737886

No comments:

Post a Comment